» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகள் அழிப்பு : தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை!

வெள்ளி 23, மே 2025 10:04:59 AM (IST)



பசுவந்தனை அருகில் வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகளை  தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகில் செவல்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவரது வீட்டில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி வீட்டில் இருந்தவர்களையும், அக்கம்பக்கத்தாரையும் அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்

இதையடுத்து ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு சென்று கடந்தை வண்டுகள் கூட்டினை தீப்பந்தம் மூலம் அகற்றினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தந்த கடந்தை வண்டுகளை அகற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory