» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் ஜமாபந்தி: 30 பயனாளிகளுக்கு இ-பட்டா!

வியாழன் 22, மே 2025 8:48:05 PM (IST)



விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாய முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

இதில் ஏற்கனவே 3 பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 30 இலவச வீட்டுமனை மனுக்கள் பரிசோதனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கம் வழங்கினார். 

இந்நிகழ்வில் சிப்காட் தாசில்தார் சந்திரன், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory