» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி இறந்த சோகத்தில் கொத்தனார் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 5, மே 2025 5:15:47 PM (IST)

தூத்துக்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர், நேரு காலனியைச் சேர்ந்தவர் திருமணி மகன் நவநீதன் (40), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அகிலா. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அகிலா கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் நவநீதன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory