» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தும்பு ஏற்றுமதி குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பில் சேதம்!

சனி 26, ஏப்ரல் 2025 8:48:55 AM (IST)



தூத்துக்குடியில் தும்பு ஏற்றுமதி செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள  தும்புகள் எரிந்து சேதம் ஆனது. 

தூத்துக்குடி விஇ ரோட்டில் டிஎஸ்எப் வணிக வளாகம் எதிரே மில்லர் புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது. இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் நேற்று இரவு தும்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் இரண்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமாய் இருக்கும் என கூறப்படுகிறது. 



தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்து மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory