» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாப சாவு

வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:16:33 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் துரைசிங் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் விமல் குமார் (36), பெயிண்டர். இவர் இன்று  மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மீனாட்சிபுரம் 5வது தெருவில் வடிவேல் ராஜா என்பவரது  வீட்டில் முன் பகுதியில் கயிறு கட்டி தொங்கிய படி பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு முன் இருந்த உயர் அழுத்த மின் வயரில் அவரது உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory