» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்: சில்லறை பிரச்சனைக்கு தீர்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:05:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகம் செய்யப்படுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநர்களிடையே சில்லறை தொடர்பாக வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும்வகையில், டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கியூஆர் கோடு அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் இப்பரிவர்த்தனையை போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்தோ, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ, ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவோ பணம் செலுத்தி, நடத்துநரிடம் பயணச்சீட்டு பெறலாம் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)










