» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதன் 16, ஏப்ரல் 2025 7:54:01 AM (IST)
பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளும் நிர்வாக இயக்குநரைக் கண்டிப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணிமனைத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலச் செயலர் பிச்சைமணி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார். சிஐடியூ ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகி டென்சிங், சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் பூபதி, கதிரேசன் நல்லபெருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ஜோசப், பீட்டர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)










