» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவலரின் தாய் கொலை வழக்கில் இளம்பெண் கைது : நகை மீட்பு - பரபரப்பு தகவல் !
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்த வழக்கில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70). மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஜெயபால் இறந்து விட்டதால் வசந்தா தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வசந்தா தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் திருடுபோயிருந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜான் ஆல்பட்ஜான் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக டிஐஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பேய்குளம் அருகே உள்ள மீரான் குலத்தைச் சேர்ந்த செல்வ ரதி (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட வசந்தா வீட்டில் எலுமிச்சம்பழம் மரம் வளர்த்து வந்துள்ளார். மேலும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளார்.
வசந்தாவின் வீட்டில் எலுமிச்சம்பழம் மற்றும் கோழிகளை செல்வரதி திருடி சென்றுள்ளார். இதை தட்டி கேட்ட வசந்தாவிடம் தகராறு செய்து அவரை வீட்டுக்குள் கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதற்காக 6 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் நகைகளை மீட்டனர். மேலும். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)










