» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள், ஓட்டுநர்கள் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு!

திங்கள் 17, மார்ச் 2025 10:52:17 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 365 நாளும் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். வழங்கும் கூலி வாழ்க்கை கூலியாக இல்லை.  மாவட்ட ஆட்சியர் அறிவித்த படி தூய்மை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ஆணையின்படி கனரக தூய்மை ஓட்டுனர்களுக்கு ரூ.636, தூய்மை இலகுரக ஓட்டுநர்களுக்கு ரூ.598, தூய்மை பணியாளர்களுக்கு ரூ.497 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் மற்றும் ஓட்டுநர் கோரிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

இதில் தொழிலாளர்களுக்கு 2024 மற்றும் 2025  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்த  GO, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று  முடிவானது. தொழிலாளர்களுடைய PF, ESI, முறையாக தொழிலாளர் கணக்கில் வரவு வைத்து  இஎஸ்ஐ கார்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்க ஆவணம் செய்யப்படும் என்று ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் காெண்டது. பேச்சுவார்த்தையில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தச் சேர்ந்த சகாயம், பொன்ராஜ், மின்னல் அம்ஜித், சிவராமன் முருகன் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory