» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கியதாக உறவினர்கள் 3 பேர் கைது

வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:03:02 PM (IST)

சாத்தான்குளம் அருகே மதுகுடிப்பதை கண்டித்து வாலிபரை தாக்கிய அவரது உறவினர்கள் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் மாயாண்டி(23). சவுண்ட் சர்வீஸ் கடை ஊழியர். இவருக்கு மதுபழக்கம் காரணமாக ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்தாராம். 

இந்நிலையில் கடந்த 16ம்தேதி மாயாண்டியிடம், அவரது சித்தப்பா உறவு முறையான அதே பகுதியை சேர்ந்த தளவாய்மணி (39), வீரமணி(40), ரமேஷ்(35) ஆகியோர் நீ குடிப்பதால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே குடிப்பழக்கத்தை கைவிடு என்று அறிவுரை கூறினார்களாம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த தளவாய் மணி உள்ளிட்ட 3 பேரும் மாயாண்டியை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குபதிந்து தாக்குதலில் ஈடுபட்ட தளவாய்மணி, வீரமணி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory