» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வணிக அதிகார பிரகடன மாநாடு ஆலோசனைக் கூட்டம்: மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு!

வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:14:55 AM (IST)



திருச்செந்தூரில் 42வது வணிக அதிகார பிரகடன மாநாடு குறித்து தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது வணிக அதிகார பிரகடன மாநாடு குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் ராஜ் மஹாலில் நடந்தது.  மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். திருச்செந்தூர் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் பாரதி சுரேஷ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்தூல்லா, தலைமைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், துணைத் தலைவர் வெற்றி ராஜன், மாநில இணை செயலாளர் தசரத பாண்டியன், ஜெபஸ்திலகராஜ், பீட்டர், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜன், மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சந்திரன், நாராயணன், அருள்ராஜா, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் அனைத்து வணிகர் நலச்சங்க செயலாளர் கவாஸ்கர் அன்பளிப்பு வழங்கினார். பொருளாளர் ஜாபர் அலி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி அம்ரோஸ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory