» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் நகராட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 21, பிப்ரவரி 2025 8:07:58 AM (IST)



திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம் நடைபெறும் சாலையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சேதப்படுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பல கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டத்திற்காக போடப்பட்ட கான்கிரீட் சாலைகளை மாசி தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சேதப்படுத்தியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் செல்வ குமரன், முன்னாள் நகர தலைவர் நவமணிகண்டன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா ,சத்தியசீலன்  மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், சரஸ்வதி, பாலாஜி, மாவட்ட செயலாளர் பாப்பா, கனல் ஆறுமுகம், பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாவட்ட பிற மொழி பிரிவு தலைவர் ஜெயா நாச்சியார், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, ஐடி விங் மாவட்ட துணைத் தலைவர் சத்யராஜ்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாகரன், உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory