» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனை: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!

சனி 26, அக்டோபர் 2024 11:39:21 AM (IST)

கயத்தாறு அருகே வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம், செங்கமங்கலம் உடையார் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் பாலசுப்ரமணியன் (35). கார் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். 

இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த பாலசுப்ரமணியன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory