» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கும் அரசாணை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூலை 2024 12:39:40 PM (IST)

கள்ளர், மறவர் அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என ஒரே பெயராக அழைக்க அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சிடம் அளித்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையர் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசால் 1994ல் அறிவிக்கப்பட்டு கடந்த 11.09.1995 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் அரசாணையை இதுவரை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 முதல் 23 சதவீதம் பேர் வரை தேவர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர் எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் கீழ் தேவர் சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசாணையை முறையாக தமிழ்நாடு அரசு அமல்படுத்தினால் மட்டுமே எங்கள் சமுதாய மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ச்சியடைய முடியும்.
மேற்கண்ட கோரிக்கை சம்பந்தமாக மதுரை மேலூரை சேர்ந்த எங்கள் சமுதாய வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரனை நடத்திய நீதிமன்றம் இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என கூறி இந்த வழக்கினை தள்ளுபடி செய்தது. தற்போது இது சம்பந்தமான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்ககோரி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் ஒரு அங்கமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளர், மறவர் அகமுடையார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவர் அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










