» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் பொம்மைகள் குடோனில் தீ விபத்து : தூத்துக்குடியில் பரபரப்பு!!

சனி 27, ஏப்ரல் 2024 9:57:24 PM (IST)

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் பிளாஸ்டிக் பொம்மைகள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் அருகிலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் பைபர் இலைகளைக் கொண்டு பொம்மை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கே இருந்த பைபர் இலை மற்றும் பிளாஸ்டிக் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் தீயில் கொளுத்துவிட்டு எரியத் துவங்கியது.தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்தது. 

இதைத்தொடர்ந்து விரைந்து அந்த பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் குடோன் அருகே ஏராளமான குடிசை வீடுகள் இருப்பதால் குடிசை வீடுகளுக்கு பரவாமல் உடனடியாக தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனார். தீவிபத்து காரணமாக அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்ததால் கரும்புகை காரணமாக அந்த  பொதுமக்கள் அவதி பாதிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory