» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தகராறு செய்து கொலை மிரட்டல்: ரவுடி கைது
சனி 4, மே 2024 8:38:30 PM (IST)
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுகாதேவி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இலுப்பையூரணி கண்மாய் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (எ) மந்திரமூர்த்தி (32) என்பதும், அவர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை இடைமறித்து அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி பரமசிவம் (எ) மந்திர மூர்த்தியை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.