» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 9:57:19 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் அமைக்க திமுகவினருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகாித்து வருகிறது வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகாிக்கும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பேருந்து நிறுத்தங்கள், ஆகியவற்றில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு கட்சியின் ஓன்றிய நகர பகுதி பேரூர் வார்டு கிளை அமைப்புகளும் சார்பு அணிகளும் இணைந்து செய்திட வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory