» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரை அரிவாளால் வெட்டியவா் கைது!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:24:32 AM (IST)

ஆத்தூரில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் தெற்குரத வீதியை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் ஆறுமுகம் (52). சாகுபுரம் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் முத்துராஜ் 10ஆம் வகுப்பு தோ்வு எழுதாமல் வீட்டில் இருந்துள்ளாா். 

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தன் மகன் முத்துராஜை அடித்து கண்டித்து வேலைக்கு போகும்படி கூறியுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக முத்துராஜ் ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். இதையடுத்து 23ஆம் தேதி இரவு ஆத்தூா் போலீசார் முனியசாமி (32), முத்துராம­லிங்கம் (31) மற்றும் விக்னேஷ் ஆகியோா் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனா். 

அப்போது அரிவாளுடன் வீட்டி­லிருந்து வெளியே வந்த ஆறுமுகம் போலீசாரை அவதூறாகப் பேசியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளாா்.  இதில் போலீசார் முனியசாமி, முத்துராம­லிங்கம் ஆகிய இருவருக்கு வெட்டு விழுந்தது. விக்னேஷ் மற்றும் அருகிலி­ருந்தவா்கள் சப்தம் போட்டதால் ஆறுமுகம் அரிவாளுடன் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory