» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
வியாழன் 18, ஏப்ரல் 2024 11:55:18 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில வாலிபர் தூக்குபோட்டு தற்காெலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள வடக்கு தோழப்பன் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன் மகன் பாலமுருகன் (37). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் குடுபத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்தாராம்.
அவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டாராம். இரண்டு மனைவிகளும் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்களே என்ற மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
SaminthanApr 18, 2024 - 05:37:46 PM | Posted IP 162.1*****
குடி குடியை கெடுக்கும்
தமிழன்Apr 18, 2024 - 02:36:57 PM | Posted IP 162.1*****
காரணம் - அரசு டாஸ்மாக்.
SriiApr 19, 2024 - 02:27:07 AM | Posted IP 172.7*****