» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகன காப்பகத்தில் பைக் திருடியவர் கைது!

புதன் 1, மே 2024 8:48:58 AM (IST)

கோவில்பட்டியில் பேருந்து நிலைய வாகனக் காப்பகத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட அத்தைகொண்டான், இந்திரா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய் (21). இவா் தனது பைக்கை கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வாகனக் காப்பகத்தில் நிறுத்தி விட்டு ஊருக்குச் சென்றாராம். 

மறுநாள் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி பாரதிநகா் மேட்டுத் தெருவை சோ்ந்த ஊா்க்காவலன் மகன் முத்துக்குமாா் (27) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory