» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகன காப்பகத்தில் பைக் திருடியவர் கைது!
புதன் 1, மே 2024 8:48:58 AM (IST)
கோவில்பட்டியில் பேருந்து நிலைய வாகனக் காப்பகத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட அத்தைகொண்டான், இந்திரா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய் (21). இவா் தனது பைக்கை கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வாகனக் காப்பகத்தில் நிறுத்தி விட்டு ஊருக்குச் சென்றாராம்.
மறுநாள் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி பாரதிநகா் மேட்டுத் தெருவை சோ்ந்த ஊா்க்காவலன் மகன் முத்துக்குமாா் (27) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.