» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் கதவை உடைத்து திருடிய வாலிபர் கைது!
திங்கள் 15, ஏப்ரல் 2024 8:41:30 AM (IST)
தூத்துக்குடி அருகே கோவில் மணி மற்றும் வீட்டின் கதவை உடைத்து டிவி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூரில் கருப்பசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் கிரில்கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி கோவிலில் இருந்த 5 வெண்கல மணியை திருடி சென்று விட்டாராம். இதே போன்று மேலமருதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலகருப்பசாமி (38) என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டாராம்.
இது குறித்து தருவைகுளம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற மூக்காண்டி (30) என்பவர் டி.வி மற்றும் கோவில் மணிகளை திருடியது தெரியவந்தது. உடனடியாக தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை ஆகியோர் முருகானந்தம் என்ற மூக்காண்டியை கைது செய்தனர்.