» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனை: வியாபாரி தற்கொலை!!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 9:05:00 AM (IST)

கயத்தாறு அருகே குடும்ப பிரச்சனை காரணமாக வியாபாரி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமம் சந்தி தெருவை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் சவுந்தர பாண்டியன் (35). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். சவுந்தர பாண்டியன் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவருடைய மனைவி ராமர் கண்டித்துவிட்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். 

இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் வீட்டிற்கு வந்த மனைவி, தனது கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory