» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 557வது மற்றும் 558வது புதிய கிளைகள் திறப்பு விழா

திங்கள் 6, மே 2024 5:54:42 PM (IST)



தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 557வது மற்றும் 558வது புதிய கிளைகள் விழுப்புரம் வளவனூர் மற்றும் தெலுங்கானா நிசாமாபாத்தில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ATM வசதியுடன் வங்கியின் 557வது மற்றும் 558வது கிளைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 557வது கிளையை தொழிலதிபர் மற்றும் நிலக்கிழார் சுரேஷ் திறந்து வைத்தார். தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் 558வது கிளையை நிசாமாபாத் சேம்பர் தலைவர் ஜெகதீஸ்வர் ராவ் திறந்து வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.

புதிய கிளைகள் திறப்பு  குறித்து  வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் அவர்கள் விளக்கியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 557வது மற்றும் 558வது கிளைகளை ATM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 558 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.


மக்கள் கருத்து

Ganeshrajanமே 8, 2024 - 05:35:09 AM | Posted IP 172.7*****

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) வங்கி சேவையில் புதிய புரட்சிகரமான சேவை செய்து வருகிறது தங்களது வங்கி சேவை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory