» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவு திரட்டிய முன்னாள் எம். பி., ஜெயதுரை!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:52:06 AM (IST)



ஆழ்வார்திருநகரியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி.ஜெயத்துரை வீதி வீதியாக நடந்து சென்று ஆதரவு திரட்டினார்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி.,க்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் திமுகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் திமுக எம்.பி., ஜெயத்துரை தனது ஆதரவாளர்களுடன் ஆழ்வார் திருநகரியில் பஜார், பஸ் ஸ்டாண்ட் ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டீ கடைகளில் வீதிகளில் நேரில் சந்தித்து துண்டுபிரசுரங்களை வழங்கி வீதி வீதியாக நடந்து சென்று ஆதரவு திரட்டினார்

அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேசியதாவது கடந்த டிசம்பர் மாதம் தாமிரபரணி மழைவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்டிடும் பணிகளை முதல்வர் தலைமையில் அனைத்துதுறை அமைச்சர்கள், அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் தராதபோதும் தமிழக முதல்வர் துரிதமாக நிவாரணம் வழங்கியதுடன், வீடு கட்ட நிதியுதவியும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் போன்றவற்றையும் துரிதமாக வழங்கினார். இதனை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை தந்திடவேண்டும்.

தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி பெற்றிட நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்பி அவர்களை மீண்டும் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார், முன்னாள் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்தாஸ், மங்களபுரம் பட்டுராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பட்டாணி சேகர், வார்டு செயலாளர் அண்ணாமலை, முன்னாள் நகர செயலாளர் தாமஸ், நகர பிரதிநிதி முருகன், முன்னாள் விவசாய அணி வேல்நயினார், நகர பிரதிநிதி பரமசிவன், பெருங்குளம் நகர செயலாளர் பாலமுருகன், நகர பொருளாளர் செல்லையாபாண்டியன், நிர்வாகிகள் லட்சுமணன், துரை இளைஞர் அணி துணைச் செயலாளர் மகேஷ, விவசாய சங்கத் தலைவர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory