» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி வழிப்பறி: 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:51:34 AM (IST)

ஏரல் அருகே அரிவாளால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர்களிடம் பணம், செல்போனை பறித்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பட்ராலி மகன் காஜா முகைதீன் (29), அபுல் மகன் அன்வர் (21). இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்து பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொணடிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 3பேர் அரிவாளைக் காட்டி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

பணத்தை கொடுக்க மறுத்த அன்வரை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.3ஆயிரம் பணம் மற்றும் முகதீனிடம் இருந்த ரூ.8ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த அன்வர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory