» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் காவலரின் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:39:22 AM (IST)

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில், பெண் காவலரின் கணவர் தூக்குபோட்டு தற்காெலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை குடியிருப்பில் வசிப்பவர் சவுந்திர பாண்டியன் மகன் பட்டுராஜா (48). இவர் என்.டி.பி.எல்., அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (40), ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நேற்று பட்டுராஜா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம் : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் மகன் ஆனந்த கிருஷ்ணன் (36). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தையில்லையாம். இதனால் மனவேதனையில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory