» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 9:53:27 AM (IST)

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வானிலை மையம் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மேக கூட்டம் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை. 

இந்நிலையில், அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போகுது மாநகரப் பகுதி முழுவதும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையால் தூத்துக்குடி மாநகரப் பகுதியை சுற்றியுள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory