» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 9:53:27 AM (IST)
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வானிலை மையம் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மேக கூட்டம் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போகுது மாநகரப் பகுதி முழுவதும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையால் தூத்துக்குடி மாநகரப் பகுதியை சுற்றியுள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.