» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக மாவட்ட செயலர் முன்னிலையில் அமமுகவினர் ஐக்கியம்
வியாழன் 11, ஏப்ரல் 2024 9:12:14 PM (IST)
சாத்தான்குளம் அருகே அமமுகவினர், அதிமுக மாவட்ட செயலர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி புதன்கிழமை சாத்தான்குளம் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது உசரத்துக்குடியிருப்பில் அமமுகவைச் சேர்ந்த 26 பேர்கள் அக்கட்சியில் இருந்து விலக அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில வர்த்தக பிரிவு இணை செயலர் ஆனந்தராஜ், முன்னாள் மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் திருமணவேல், மாவட்ட ஜெ,பேரவை இணை செயலர் முத்துராமலிங்கம், ஒன்றிய அதிமுக செயலர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, ஒன்றிய ஜெ, பேரவை செயலர் பாலமேனன், ஒன்றிய மாணவரணி செயலர் ஸ்டேன்லி ஞானபிரகாஷ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் அப்பாத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
AMMKApr 12, 2024 - 10:31:52 AM | Posted IP 162.1*****