» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு!
வியாழன் 11, ஏப்ரல் 2024 3:31:59 PM (IST)
தூத்துக்குடியில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரித்தார்.
இஸ்லாமியர்களின் திருநாளான இன்று தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்புத் தொழுகைக்காக தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் உள்ள ஈதுகா தோட்டத்தில் கூடியிருந்தனர். அவர்களின் தொழுகை முடிந்து வரும் போது அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இஸ்லாமியர்களிடம் ரமலான் வாழ்த்து தெரிவித்து அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட இணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் டேக் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட சிறுபாண்மை அணி செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜெ. தனராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.