» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே சோகம்!!

வியாழன் 28, மார்ச் 2024 10:27:05 AM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ராமநாதபுரம் அருகேயுள்ள பனையேறி நேந்தல்  கிராமத்தைச் சேர்ந்தவர் இருளன் மகன் குருசாமி (34). இவர் பைக்கில் தூத்துக்குடி வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். கலைஞானபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அவரது பைக் மீது மோதியது. 

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த குருசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநரான கே.வேலாயுத புரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மகன் ஜீவானந்தம் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory