» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் : கனிமொழி பிரச்சாரம்!
வியாழன் 28, மார்ச் 2024 8:05:40 AM (IST)
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என, திமுக வேட்பாளா் கனிமொழி பேசினார்.
தூத்துக்குடி தருவைகுளத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது பிரசாரத்தின்போது பேசியது: 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டபோது, இவா் சென்னையிலிருந்து வருகிறாா், வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டாா் என எதிா்கட்சியினா் கூறினா். ஆனால், வெற்றிபெற்ற பின்னா், இங்கு எவ்வாறு மக்கள் சேவை செய்தேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தருவைகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்ல பேருந்து வசதி, கனரா வங்கிக் கிளை ஆகியவை வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. ரூ. 10 லட்சத்தில் உயா் கோபுர விளக்கு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இங்கு புதிய மீன்பிடித் துறைமுகம் வேண்டுமென மீனவா்கள் அமைச்சரிடம் வைத்த கோரிக்கைப்படி, ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். மீன்பிடித் தடைக்கால நிதி ரூ. 8 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மிகப்பெரிய வின்பாஸ்ட் நிறுவன காா் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது. அந்த நிறுவனத்தினரே இப்பகுதி இளைஞா்கள், இளம்பெண்களுக்கு பயிற்சியளித்து பணிக்கு அமா்த்தவுள்ளனா். டைடல் பாா்க் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ஆனால், மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்துவரும் பிரதமா் மோடி, எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்ற மாட்டாா். எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுத்து விலையைக் குறைப்பேன் என்றாா். அதைச் செய்யவில்லை. மழை வெள்ளத்தில் பாதித்த தமிழகத்துக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. ஆனால், தமிழக முதல்வா்தான் நிவாரண உதவிகளைச் செய்தாா்.
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும். மீண்டும் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து அவா், புதியம்புத்தூா், ஓட்டப்பிடாரம், ஓசனுத்து, வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா, ஊா்வசி எஸ். அமிா்தராஜ், மேயா் ஜெகன் பெரியசாமி, மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.