» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜய் சீலன் வேட்புமனு தாக்கல்!!

புதன் 27, மார்ச் 2024 12:27:11 PM (IST)



தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜய் சீலன் வேட்புமனு தாக்கல் செய்தார். 

மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது துணைவியார் ரீணா சீலன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாஜக மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன், வெங்கடேசன் சென்னக்கேசவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகர செயலாளர் சலீம், அமமுக மாநகர மாவட்ட செயலாளர் பிரைட்டர், ஓபிஎஸ் அணி மாநகர மாவட்ட செயலாளர் ஏசாதுரை ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது அவர் தனது கட்சியின் சின்னமான சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தார். 

மேலும், பெரியார் அம்பேத்கர், முத்து ராமலிங்க தேவர் ஆகியோர் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். தூத்துக்குடியில் தமாகா வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது, முதல் 3 நாள்கள் மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. 

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி புதிதாக எந்த திட்டங்களையும் தூத்துக்குடிக்குக் கொண்டு வரவில்லை. நான் வெற்றி பெற்றால், தொழில் நகரமான தூத்துக்குடியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் சிறந்த நிறுவனங்களைக் கொண்டுவருவேன். மக்களின் நலனுக்காகப் பாடுபடுவேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் எம்பி உடையப்பர், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் வாரியார், சுவைதர், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் உஷாதேவி சண்முகசுந்தரம், கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ்கனி, வன்னியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory