» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் புதுக்கணக்கு விற்பனை துவக்கம்
புதன் 27, மார்ச் 2024 9:52:38 AM (IST)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் புதிய நிதி ஆண்டிற்கான முதல் விற்பனையை எஸ்.ஆர்.எஸ். குழுமங்களின் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ நிறுவனம் தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. கே.சின்னத்துரை அன் கோ ஜவுளி மற்றும் நகைக்கடையின் புதிய நிதி ஆண்டிற்கான தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. எஸ்.ஆர்.எஸ். குழுமங்களின் தலைவர் சுரேஷ்குமார், சுபா சுரேஷ்குமார் ஆகியோர் ஜவுளி மற்றும் நகைகளை பெற்று புதுக்கணக்கு வணிகத்தை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.