» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி - 2பேர் படுகாயம்!

திங்கள் 25, மார்ச் 2024 5:45:04 PM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பரதர் தெருவைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் ஆல்வின் (47), சிலுவை நாடார் விளை தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திர சேகரன் (77), அவரது மனைவி பட்டுகனி (65) ஆகிய மூவரும் ஆட்டோவில் தூத்துக்குடி அருள்பிரகாசம் மருத்துவமனைக்கு வந்து விட்டு பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 

முத்தையாபுரம் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் கந்தவிலாஸ் ஹோட்டல் அருகில் செல்லும் போது, சென்னைமேற்கு மாம்பழம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் செல்வகுமார் (53) என்பவர் ஓட்டிவந்த கார் அவர்களது ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவ்விபத்தில் காயம் அடைந்த மற்ற 2பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory