» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் : மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்!

திங்கள் 25, மார்ச் 2024 3:50:11 PM (IST)



தூத்துக்குடியில் 100 சதவீதம் வாகுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் வரையிலான மினி மாரத்தான் ஓட்டமானது இன்று காலை  நடைபெற்றது. 

மினி மாரத்தான் ஓட்டத்தினை வாக்குப்பதிவு அலுவலர் / மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா,   உதவி தேர்தல் அலுவலர் / தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory