» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் : ஏற்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

திங்கள் 25, மார்ச் 2024 3:11:09 PM (IST)



தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர்  கனிமொழியை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கனிமொழி கருணாநிதி உதயசூரியன் சின்னத்திலும், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் நவாஸ்கனி ஏணி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களை ஆதரித்து தி.மு.கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் 26.03.2024 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி அளவில் எட்டையபுரம் மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள சிந்தலக்கரை கலைஞர் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற இருக்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory