» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது மிளா மோதி அரசு பேருந்து நடத்துனர் பலி!

ஞாயிறு 24, மார்ச் 2024 11:23:49 AM (IST)

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மிளா மோதி அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (53). இவர் கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை பணிக்கு செல்வதற்காக உறவினர் பென்னட் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை பென்னட் ஓட்ட தனபால் பின்னால் அமர்ந்து இருந்தார். 

பொற்றையடி சாய்பாபா கோவில் அருகே செல்லும்போது புத்தனாறு கால்வாயில் இருந்து ஓடி வந்த மிளா ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர். மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தனபால் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory