» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது டிராக்டர் மோதல்: சிறப்பு எஸ்ஐ காயம்!
சனி 23, மார்ச் 2024 9:45:13 PM (IST)
சாத்தான்குளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மல்லல் புதுக்குளத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (56). இவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி அன்று பிரேம்குமார், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் பைக்கில் சென்றார்.
பழனியப்பபுரம் அருகே சென்றபோது எதிரே வைக்கோல் லோடு ஏற்றி வந்த டிராக்டர், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பிரேம்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாலர் .சுரேஷ்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்..