» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட அமமுக மறு சீரமைப்பு : டிடிவி தினகரன் அறிக்கை

புதன் 24, ஜனவரி 2024 4:51:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் "தூத்துக்குடி மாநகர்" மற்றும் "தூத்துக்குடி புறநகர்" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "தூத்துக்குடி மாநகர்" மற்றும் "தூத்துக்குடி புறநகர்" என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளைக் கீழ்காணுமாறு உள்ளடக்கி செயல்படும்.

தூத்துக்குடி மாநகர் மாவட்டம்: 1. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, 2. விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி, 3. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளும், தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் 1. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி, 2. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி, 3. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதி ஆகிய தொகுதிகளும் இடம்பெறும். 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக T.விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக செயலாளர்) தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளராக பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் (கழக மாணவர் அணி இணைச்செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இதுவரை மாணவர் அணி இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ்  அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும்,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் சிவபெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பிலிருக்கும் மனோகரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.  கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

கழக அமைப்பு ரீதியாக தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory