» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)



தூத்துக்குடி சகாய மாதா தொடக்கப் பள்ளியில் ரூ.20.70 இலட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி எஸ்இபிஇசி பவர் பிளாண்ட் நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.20.70 இலட்சம் மதிப்பிலான லயன்ஸ் டவுண் "சகாய மாதா தொடக்கப்பள்ளியின் சுற்றுச் சுவர், கழிவறை புதுப்பித்தல் மற்றும் நடைப்பாதை பணிகள் நடைபெற்றுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், பங்குத்தந்தை பிரதீபன், பவர் பிளாண்ட் அதிகாரிகள் ஸ்ரீநிவாச ரெட்டி, நரேந்திரா, பெண்டன் இன்ஜினிரியங் லிப்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SVM ராஜ்Dec 1, 2023 - 08:01:23 PM | Posted IP 172.7*****

அரசு பள்ளிகளில் ஒன்று கூட இவர்கள் கண்ணில் படவில்லையா? SEPC க்கு அருகில் தெர்மல் நகர் நடுநிலைப்பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரையுடன் இயங்கி வருகிறது. அது குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு. அதற்கு இந்த 20 லட்சத்தை பயன்படுத்தலாமே...தனியார் பள்ளிக்கு ஏன் செலவழிக்க வேண்டும்.?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory