» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பள்ளியில் லேப்டாப்கள், டிவி திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 29, நவம்பர் 2023 3:31:56 PM (IST)



எட்டயபுரம் அருகே   அரசு பள்ளியில் லேப்டாப்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை ஆசிரியர்கள் திறக்க வந்தபோது பள்ளியின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள்   அறை,  வகுப்பறை என 4 அறைகளில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 லேப்டாப், 43 இன்ச் டிவி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

மேலும் கொள்ளையர்கள் 2 பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதன் அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணினிகள் திருடுபோய் குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory