» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்துநகர் ரயிலில் வட மாநிலத்தவர் அட்டகாசம் : முன்பதிவு பயணிகள் அவதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:07:16 PM (IST)
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில ஆசாமி போதையில் அட்டகாசம் செய்ததால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் இரயில்வண்டி நேற்று இரவு வழக்கம் போல புறப்பட்டது. இந்த இரயிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பெண்கள் முன்பதிவு செய்திருந்தனர். இரவு 9.05 மணிக்கு மேல்மருவத்தூர் இரயில் நிலையம் வந்தபோது 4 பெண்களும் இரயிலில் ஏறினர். எஸ்.4 பெட்டியில் ஏறி உட்கார சென்ற போது, அந்த சீட்டில் 4 வடமாநிலத்தவர் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்பதிவு செய்த இருக்கையில் இருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். குடிபோதையில் இருந்த வட மாநிலத்தவர்கள் நகரவில்லை. இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் வந்து எழுந்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதில் ஒருவர் மட்டும் சீட்டிலிருந்து எழுந்திருக்காமல் தகராறு செய்துள்ளார். இந்த விபரத்தை தூத்துக்குடியில் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக இரயில் பொது வணிகப் பிரிவிற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விழுப்புரத்தில் இரயில்வே போலீசார் வந்து வட மாநில வாலிபரை கவனித்து விசாரித்ததில் டிக்கெட் இல்லாமலே பயணம் செய்தது தெரியவந்தது. தூத்துக்குடி முத்துநகர் இரயிலில் சமீப காலமாக முன்பதிவு பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் வட மாநிலத்தவரை, ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக வரும் இரயில்வே போலீசாரும், டிக்கெட் பரிசோதகரும் கண்டு கொள்வதில்லை. இதனால் இரயில் பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள், தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மக்கள் கருத்து
ஒருவன்Nov 28, 2023 - 06:39:01 PM | Posted IP 162.1*****
அனைவரும் ஒன்று கூடி அடித்து விரட்டி விட வேண்டியது தானே , அப்போதே தான் வடை நாட்டுக்காரன் திருந்துவான்
தமிழன்Nov 28, 2023 - 06:34:48 PM | Posted IP 172.7*****
பல ரயில்களில் வட மாநிலத்தவர் தொந்தரவு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது
JeorgeNov 28, 2023 - 06:01:20 PM | Posted IP 172.7*****
Real
NameNov 30, 2023 - 07:12:26 AM | Posted IP 172.7*****