» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் இருசக்கர வாகனம் திருட்டு: 3பேர் கைது!

செவ்வாய் 28, நவம்பர் 2023 11:51:45 AM (IST)

திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் ரோடு எஸ்.கே  நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் மந்திரம் (53) என்பவர் கடந்த 26.11.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to குலசேகரன்பட்டினம் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து மந்திரம் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் ரசூல் (21), தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் பகுதியை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (29) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் முத்துகிருஷ்ணன் (எ) முத்து (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து மந்திரத்தின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

தனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் ரசூல், மாடசாமி மற்றும் முத்துகிருஷ்ணன் (எ) முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரசூல் மீது ஏற்கனவே குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் என 12 வழக்குகளும், மாடசாமி மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory