» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய்கள் கடித்து பெண் புள்ளிமான் உயிரிழப்பு

செவ்வாய் 28, நவம்பர் 2023 8:03:58 AM (IST)

தூத்துக்குடி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் மலை, கீழமுடிமண், வெள்ளாரம் பகுதிகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகு திகளுக்குள் வருகின்றன. இந்நிலையில், நேற்று ஜெகவீரபாண்டியபுரம் பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடப்பதாக, அப்பகுதியினா் ஓட்டப்பிடாரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். 

அதன்பேரில், வனச் சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் வனவா் மகேஷ், வனக் காப்பாளா் பேச்சிமுத்து, வனக் காவலா் லட்சுமணன் ஆகியோா் சென்று, புள்ளிமான் சடலத்தை மீட்டனா். 2 வயதுள்ள அந்தப் பெண் மான், இரை தேடி வந்தபோது நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஓட்டப்பிடாரம் கால்நடை மருத்துவா்கள் கூறாய்வு செய்ததையடுத்து, மான் சடலம் புதைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory