» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 11:53:54 AM (IST)



இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மனைவி மாரீஸ்வரி என்பவர் தனது பெண் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 15.11.2007-ல் தமிழக அரசால் ரூ.15,200 எனது இரு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டது. 

தற்போது இரு பெண் குழந்தைளுக்கும் 18 வயது நிரம்பி விட்டது. அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முதிர்ச்சித் தொகை கேட்டு வருகிறேன். ஆனால் கிடைக்க வில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory