» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு : தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:36:37 PM (IST)

விளாத்திகுளம் அருகே உள்ள கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர்.இவரது ஆட்டுக்குட்டி ஊரில் உள்ள பழமையான சுமாா் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி சரியான மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். நீண்ட நேரம் உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











எப்படியும்Sep 26, 2023 - 06:34:27 PM | Posted IP 172.7*****