» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜவுளிக்கடை கட்டுமான பணியால் அதிரும் வீடுகள்: பொதுமக்கள் புகார்..!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:20:47 PM (IST)

தூத்துக்குடியில் ஜவுளிக் கடையின் கட்டுமான பணிகளால் அருகில் உள்ள வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி வி.இ. ரோடு, ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த மக்கள் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனுவில், "ரைஸ்மில் தெருவில் உள்ள ஜவளிக் கடையில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த கடையின் கட்டிடங்களை இடிக்கும் போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்வுகளையும், சத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 

இதனால் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தில் முறையிட்டபோது 2 நாட்கள் பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் அனைவரும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory