» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பாக நன்கொடை வழங்கல்

திங்கள் 30, ஜனவரி 2023 5:02:33 PM (IST)



தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பாக செவித்திறன் குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பள்ளியின்  தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர் வரவேற்று பேசினார். நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான சண்முகப் பிரியா,  பேரா.யோகேஸ்வரி நித்யா மற்றும் பேரா.கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடைகள் வழங்கினர். இந்நிகழ்வில் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் மற்றும் செவித்திறன் குன்றிய மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory