» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2023 6:02:06 PM (IST)
தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 74-வது குடியரசு தினவிழா மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.சொக்கலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது. 1ம் கேட் காந்தி சிலை, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ் பர்னாந்து முதலான தேசிய தலைவர்கள் சிலைகள் வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலை மற்றும் நீதிமன்றம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, பக்கிள்புரத்தில் உள்ள காமராஜ் நினைவு நர்சரி பள்ளியில் வழக்கறிஞர் எம்.சொக்கலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள.மாவட்ட தலைவர் என்.வி. ராஜேந்திரபூபதி, செயலாளர் ஏ.கே.பாபு, மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் வின்சென்ட், வட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.