» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ஆர்பிஐ அங்கீகாரம்!
புதன் 30, நவம்பர் 2022 10:23:14 PM (IST)
இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியினை அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து, மேலும் தனது தொலை நோக்கு பார்வையாக, இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பாரதிய ரிசர்வ் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கோள்ளும் ஒரு முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும், அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்கு உரிய சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
இந்த வங்கி இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தையிலும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு வங்கி மீண்டும் தனது தொலைநோக்கு திட்டமாக, நாடு முழுவதும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும், அதன் சேவை திட்டங்களிலும் புதிய பரிமாணங்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது பாரத ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை அரசு துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனை வங்கியின் அனைத்துநிலை உடைமைதாரர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.வங்கியினைப் பற்றி மேலும் விபரங்களை www.tmb.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)

D. Soundara pandianDec 1, 2022 - 11:08:23 AM | Posted IP 162.1*****